நாம் மனிதர்களா?
அலைபேசி என்றோம்,
சிட்டுக்குருவியியை இழந்தோம்.
வளர்ச்சிக்கான சாலைகள் என்றோம்,
மரங்களை இழந்தோம்.
நதிகள் மிகுந்த நாடு என்றோம்,
தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கிறோம்.
வளங்கள் நிறைந்த நாடு என்றோம்,
வாழ வழிஇன்றி இருக்கிறோம்.
ஒற்றுமையானவர்கள் என்றோம்,
வேற்றுமைஇல் கிடக்கிறோம்.
சிந்தித்து கூறுங்கள்,
நாம் மனிதர்களா?
0 comments:
கருத்துரையிடுக