கண் இமை மூடி கனவு உலகத்திற்கு சென்றாலும்,
உடல் மட்டும் கவனித்திருக்கும்....
சில நேரம் தூக்கம் கூட எட்டி பார்க்க பயப்படும் ,
கேள்வி கணை எப்போது எழும்பும் என்ற பயத்தில்.....
ஒரு உருண்டை தொண்டைக்கும் வயிற்ருக்கும் இடையில் உருளும்,
கேள்விக்கு பதில் தெரியாத போது.......
மீண்டும் வருவேன் என்று இறுமாப்புடன் ,
சொல்லி செல்லும் மணி ஓசையும் ஆசிரியரும்.......
- விமலா

0 comments:
கருத்துரையிடுக