கல்லுரி வகுப்பறையில்







கண் இமை மூடி கனவு உலகத்திற்கு சென்றாலும், 

உடல் மட்டும் கவனித்திருக்கும்....  

சில நேரம் தூக்கம் கூட  எட்டி பார்க்க பயப்படும் ,

கேள்வி கணை எப்போது எழும்பும் என்ற பயத்தில்..... 

ஒரு உருண்டை தொண்டைக்கும் வயிற்ருக்கும் இடையில் உருளும்,

கேள்விக்கு பதில் தெரியாத போது....... 

மீண்டும் வருவேன் என்று இறுமாப்புடன் ,

சொல்லி செல்லும் மணி ஓசையும் ஆசிரியரும்.......
                                                                                           - விமலா


0 comments:

கருத்துரையிடுக